பாலினம் மூன்று

மாற்றம் ஒன்றே நிலையானது
வாசகத்தில் மட்டும்.

மாற்றமடைவதை எளிதில்
ஏற்பதில்லை
இப்போதைய  உலகநிலை.... 
 
 பண்புள்ளோர்  உயர்திணையாம்
பண்பு அற்றவர் அஃறிணையாம்
பண்புகளில் ஒன்று மிக்கோறை
உயர்திணையில் சேர்ப்போம்.. 

அப்பாலுக்கு பிறிதோர்  விதியையும் பிறப்பிப்போம்.. 


ஆசிர்வதித்தால் தெய்வ 
ஆசீர்வதிப்பு
குடும்ப நபரானால் குடி கெட்டு
விடுமாம்.. 



அவர்கள் தரும் 1 ரூபாய்க்கு
உள்ள சக்தி , மதிப்பும்
அவர்களுக்கு இல்லையே
இவ்வுலகில்.. 

அஃறிணைக்கு ஆட்கள் அதிகம்
இவ்வுலகில்
அஃறிணைக்கு அறிவு மிக்க
ஆட்கள் அதிகம்... 

உயிர்களை நேசிக்கும் பண்பு
அவ்வுறவுகளிடம் உண்டு
 சில உயிர்கள்
அவ்வுறவை நேசிக்காமையால்.... 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்