இடுகைகள்

kasthuri

ஆயிரம் கட்டுக்கதைகளை உருவான எழுத்தாளர.. ஆயுதச்சொற்களால் கூர்மையான மணல்துகளவள்.. ஏமாற்றங்களால் இறுக்கிப்போன பாறையவள்.. புதிய வருகைகள்  இதனால்  அவளை எவ்வித சலனத்திற்கும் இட்டுச்செல்வதில்லை...

தேடல்

தோற்றோடிப்போக இங்கு யாரும் போர் வீரர்களில்லை.. வெற்றி பெருவதற்கு இங்கு யாரும் மன்னர்களுமில்லை.. சாகும்வரையில் வாழ்க்கையைத் தேடும் மாணவர்கள் நாம்.. அவ்வளவுதான் தேடிக்கற்றுக்கொள்வோம்..

அன்பு

படம்
அப்படி ஒன்றும் வீழ்த்துமளவிற்கு அன்பு என்னை ஆட்கொள்ளவில்லை... அதற்காக.. ஆயுதமாக அதனைப் பயன்படுத்தி விடாதீர்கள்...

அதீதம்

படம்
அவனுக்கு நான்   அவ்வளவு பொருத்தமானவள் இல்லை... என்னிடம்     அன்போ மென்மையோ இல்லை ... என் காதலை     என் கண்ணீருடன் புதைத்து காலங்கள் ஓடிவிட்டன... என் புதைத்த     காதலை காதலித்துக் கொண்டு தான் இருக்கிறேன்... அவனுக்கு    சரியான பெண் கிடைக்கும்போது, அவனே என்னிடம் கூறுவான் ... மீண்டும் நாம் பிரிந்து விடுவோம் என்று.. அவனுக்கு நான்   அவ்வளவு பொருத்தமானவள் இல்லை...என அப்பொழுதும் என்னைத் தேற்றிக் கொள்வேன்   

காடு நான்

படம்
வசந்த காலத்தை இழந்த காடு நான் என்னிடம் பறவைகளின் பாடல்கள் இல்லை.. நதிகளின் ஓலம் தான் உள்ளது.. ரசிப்பற்று கிடக்கிறேன் .. நன்னீரில் ஊரிய மரப்பட்டை போல.. எறும்பு கூட்டங்களின் உணவு தேடல்களை  நான் என் வாழ்வில் கண்டதே இல்லை.. கரையான்களின் தீவிரத்தை மட்டுமே கேட்டு கொண்டிருந்தேன்..   

மன்னிப்பு எனும் சுயநலம்

படம்
அவ்வளவு உயர்த்திக் கொள்ளாதீர்கள்.. நான் மன்னிக்கும் மனம் படைத்தவர் என்று அவ்வளவு உயர்த்திக் கொள்ளாதீர்கள்.. உங்களை உயர்த்திக் கொள்வதற்கு  பிறரை கொடுமைக்காராக மாற்ற நீங்கள் எடுக்கும் ஒரு உத்தியே  மன்னிப்பு... அவ்வளவு உயர்த்திக் கொள்ளாதீர்கள்.. உங்களை நீங்களே  அவ்வளவு உயர்த்திக் கொள்ளாதீர்கள்..

பல பொருள்

எல்லாப் புன்னகையும் அன்பாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. கண்ணீரெல்லாம் துன்பத்தின் வெளிபாடுமில்லை....

அவள்

அவள் இல்லாத என் சிந்தனை சுயமற்றுப் போகிறது..                           நல்லகண்ணு தோழர்.

சாதி

சாதிய அதிகாரத்தினை நிறுவநினைக்கும், தனக்குள்ளாக சுமந்து நிற்கும் ஒவ்வொருவரும் அறிவில்லா கேடுமனம் கொண்ட நிர்வாணத்தின் குறியீடு. அதனை கண்டும்கணாதோர் அக்கருத்தின் பகுதி நேர ஊழியர்கள்.. - சிவனி

குறியதிகாரம்

குறியதிகாரம் இருந்தும் அடிமைப்படுத்த நினைக்கிறது.. இறந்துமே அதன் காரியத்தில் கண்ணாய் தானே இருக்கிறது அந்த உயிற்ற ஆணுடல்... அவளோ காதலும் வாழ்க்கையும் போய்விட்டதாய் மெளனித்துவிட்டாள்..  உயிர்பிரியும் வரை  அந்த பிணத்திற்கு அடிமை தான் அவளென்று அந்தப் பிறர் செவிக்கேட்டா குறள் ..இராவெல்லாம் விம்மி கண்மூடுகிறது . எல்லாருக்குமானது என்ற ஒன்று இவ்வுலகத்தில் இல்லை.. ஆதலால் பொதுமைப்படுத்தலைசை செய்யாதீர்கள்

சுயம்

நடத்தை கெட்டவள் என்ற சொல்லினைத் தாங்கிக் கொள்ள முடியாமல் சுயமரியாதைக்காக  விலைக்குப் பேரம் போய் விட்டாள்... அன்றிரவே அவள் இச்சமூகத்தின் மரியாதை மிக்கவளானாள்...

மோட்சம்

எந்த வித சுகாதார ஒழுங்கிற்கும், பொது ஒழுங்கிற்கும் பொருந்தாதவையே மோட்சம் பெறுவதற்கான வழி ஆகும்....                                                       _ சிவனி இப்பாலித்தினருக்குள் எத்தனை பிணக்குகள்.. எதனைச் சொல்ல வேண்டும்? எப்படிச் சொல்ல வேண்டும்? எவரிடம் இதனை இத்தனை அழகாய் சொல்வது? அவர்களின் கண்கள் என்னை எப்படி எல்லாம் ஆய்வு செய்யும்? இம்மாதிரியான பல அர்த்தமுள்ள கேள்விகளுக்கு விடை எழுதியே ஓய்ந்து போகின்றன. என் வார இறுதி நாட்கள்.... என்ன இது இத்தனை பதட்டங்கள்...  எதிலும் நான் ஆசை கொண்டு உள்நுழையவில்லையே... நான் வருகையை மதிப்பளிக்க மட்டுமே இருக்கிறேன் அப்படியிருந்தும் எனக்கு ஏன் இழப்பு குறித்தான இவ்வளவு பதட்டங்கள்....

பாலின விடுதலை

 எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கவே இவ்வுலகம்.  முன்னோர்கள் சிலரின் வேண்டுதல்களில் கூட “எல்லாரும் கைக் கால் சுகத்தோட நல்லா இருக்கணும்” என்ற பொதுநலமான வேண்டுதல்களைக் கண்டு கேட்டிருக்கலாம். ஆனால் இவ்வாறான எண்ணங்கள் இப்போது பாம்புகள் மேல்சட்டை உரிப்பது போன்று உள்ளது. எல்லோர்க்குள்ளும் பாலின அடிப்படையிலான ஒடுக்குமுறை எண்ணங்களே புகுத்தப்பட்டுள்ளன. குறிப்பாகப் பல்வேறு பாலின வகைகளை இப்போது அறிமுகப்படுத்தும் நிலையில் தான் இன்று உலகமும் உள்ளது. அவர் யார்? நான் யார்? என்ற பார்வைகளில் வெளிப்படையாக ஒளிந்திருக்கும் அதிகார குணமிக்க உயிர்கள். பாலற்ற இனங்களாக வாழ்வதிலேயே மகிழ்வு என நினைக்கிறேன். ஒவ்வொரு உயிரும் ஒன்றை ஒன்று சார்ந்திருப்பதற்கும், ஒடுக்கி இருப்பதற்கும் வேறுபாடு உண்டு. சார்ந்து வாழ்தல் என்பதே மெய்யான வாழ்வு ஆகும். பாலின விடுதலையும் சார்ந்திருத்தலில்  தான் விளையும்.  எனது அவளான நடப்பியல் நிகழ்வில்: பேருந்து பயணத்தில் நாம் அனைவருமே இதனைக் கண்டு இருப்போம். திருநங்கைகள்  உதவி கேட்பதையும், உதவி செய்வதையும் (ஆசிர்வதிப்பது). முதுகலை முடித்த கையோடு அவள் கல்வி சார்ந்த அடுத்த...

திரைப்பட விமர்சனம் (கொட்டுக்காளி -இறைவி)

                                      இறைவி, கொட்டுக்காளி வழி பெண்ணுடல்                  எனும் கூடுகள் - சிவனி இறைவி - கொட்டுக்காளி இவ்விரு திரைப்படங்களிலும் இந்தியப் பெண்களிடம் இச்சமூகம் ஏற்படுத்தியுள்ள ஏற்படுத்துகின்ற ஏற்படுத்தும் ஒழுங்குகளை மட்டுமே பேசவருவதாகத் தெரியவில்லை. பொதுவாகப் பெண்கள் எல்லா இடத்திலுமே ஆண்களால் மட்டுமல்ல அனைத்தாலும் வஞ்சிக்கப்டுகின்றனர். என்னைக் கேட்டால் பெண்களுக்கு விடுதலை என்பதே கிடையாது என்றே கூறுவேன். ஏனென்றால் அதில் பல்வேறு புரிதலுக்கான சிக்கல்கள் உள்ளன. இதுவரை அதற்கான முன்னெடுப்புகளைத் தெரிந்துக் கொள்வதற்கே பெண்கள் தனது வாழ்க்கையின் முக்கால்பங்கு காலத்தைச் செலவிடுவதாகத் தெரிகிறது. நான் சிறுபான்மையாகப் பொருளாதார சுதந்திரத்தை மட்டுமே பெற விரும்பும் பெண்களைக் கருத்தில் கொண்டு பேசவில்லை. முக்கால்பங்கு  காலம் என்பது பெண்களுடைய வயதை வைத்து அல்ல. தான் சுயச்சையாக வாழ, பெண்களுக்குத் தேவைப்படும் காலத்தை முக...

இல் ஆள்

படம்
பெண் கேட்கிறாள்... கதவு நன்றாக தாழிட்டுள்ளதா... ஆம்...  ஏன் எப்போதும் உனக்கு அந்த அடைத்தலில் இவ்வளவு சந்தேகம்.. நீ நிர்வாணமாக இருந்தாலும் போவது என் மானம் தானே... ஆம்... பெரும்பாலும் வெளி பக்கம் தாழிட்ட கதவுக்கு  எந்தப் பிரச்சினையுமில்லை... _____ குற்றசாட்டிற்கான மொழி தனது வாக்கிய அமைப்பில் தன்னை விலக்கிக் கொண்டு முழுமையடைதலைப் பெறுகிறது... விலக்கி கொள்ளுதலினால் குற்றம் விழைந்திருக்குமே ஒழிய வேறெதும் என் கண்ணிற்கு படவில்லை _____ மெய் இழந்த கவிதைக்காக ஆயிரம் மெய்யுள்ள கவிதைகள் எழுத்தினால் நினைவு கூறுகின்றன. ______ எழுதப்பட்ட கவிதைகளின் பேனாக்கள் தங்களது உரிமங்களை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்கிறன. அவைகளின் உரிமையாளர்களை கிசுகிசுத்துக் கொண்டே.... ____ 

செந்தீ

மறைதலினாலும் உதித்தலினாலுமே நம் நினைவுக்கு வருகிறான் செஞ்சூரியன்.....  பகலவன் அவன் தான்...  அவனது இருப்பை நாம் உணர்வதேயில்லை..  ஆதலாலே திட்டித்தீர்த்தாவது நினைத்திட செய்கிறான் பங்குனியிலும் சித்திரையிலும்...  _____ பிறர் சுதந்திரத்தின் மீதான சந்தேகங்களே நம் சுந்திரத்தின் எல்லை... நாமும் அடைவதில்லை.. பிறர் அடைவதில் விருப்பமும் கொள்வதும் இல்லை 😠 ____

நீலாடல்

இயலாது என்று இங்கொன்றுமில்லை. ஆனால் உருப்படியானது என்று இங்கெதுமில்லை.  கடுங்குளிறோ.. வாடைக்காற்றோ.. கடலிடமிருந்து வந்தால் அம்மீனவர்களுக்கு அது காதல் பரிசல்லவோ..  இரவெல்லாம் பெரும் தனிமையில் உன்னோடு(கடல்) நானும்..  என் உயிர்கலந்த உன் காற்றும்..  போதவில்லை..  சில நாழியாவது உன்னுள் ஊடுருவ சொல்கிறது.. என் கண்கள்.. 

கனலி

படம்
படம்
நிரந்தரங்களைத் தேடி செல்வதில் எப்போதும் மனமில்லை.  ஏனெனில் அது உண்மையில்லை..  நாடங்களை கதை புரியும் வரை மட்டுமே பார்க்க முடியும்...  பொழுது போக்கவோ..  இருப்பிற்காகவோ பார்க்க முடியாது. 
என்னிடம் நரைக்காத முடிகளும் உள்ளதென,  உதிர்ந்த கருமையான முடிகள் சொல்லிச்செல்கின்றன.... 

பொருள்

நானாக அப்பொருளைத் தேடிக்கொள்ளவில்லை...  அதற்காக ஆசையும் படவில்லை..  எவ்விதத் தொடர்புமே இல்லை எனக்கும் அப்பொருளுக்கும்..  தானாக வந்தது..  உன்னுடனே இருப்பேன்..  பாதியில்..  இது நிரந்தரமல்லாத வன்முறையான வாழ்க்கை. நாம் பிரிவோம் என்றது..  நானே வலுக்கட்டாயமாக பிடித்திலுத்தேன்...  உடையும் நிலையில்.. நானே அதனைக் கொண்டு சென்றேன்..  விட்டுவிட்டேன்... மீளவில்லை..  மீளாது மீண்டாலும் என் மனம் அப்பொருளோடு வாழாது.. 

மாதவிடாய்

வாழ்வின்றிப் போரின் உதிரம்தானே வலிய நுண்ணிய வலியினைக் கொண்டுதானே உன் வாழ்வின் பெரும் கீறலான வெட்டென மாதந்தோறும் நடக்கும் மாநிலத்தில் ஓர் உண்ணவியலா உணர்ச்சியதுவே... உண்ணவியலா இறைச்சியதுவே..  உண்ணும் பழக்கப் பிறப்பதுவே...  துக்கமில்லா வீட்டில் வீரியம் கொண்ட பேரழுகைச் சத்தம் ஒன்று..  நாதியற்று கிடந்து, தனது மூன்று, ஐந்தென நாட்களைக் கழிக்கிறது.. 
தூதரகம் போன்ற அழைப்பினில் தும்பி போல் அமர்வதும் இயற்கையே நலன்விரும்பிகளின் சேர்க்கையே ஒரு பிடிப்பை ஏற்படுத்துகிறது இவ்வாழ்வின் மீது.. 

தென்றல்

கடுமையான வியர்வையும், அசௌகரியத் தன்மையையும் நெடுநாட்கள் அனுபவித்ததில்லை....  என்றாவது தென்றல் வந்து தழுவும் என்பதற்காக..  தினம் தினம் என்னை சுவீகரித்துக் கொள்வதால்..  இடப்பெயர்வின் போது மனம் ஏனோ சமநிலையை அடைவதுபோல் நினைவு..  ஒருவர் பார்வையில் சமமானவராக, மற்றொருவர் பார்வையில் கீழானவராக..  இதுவே பெரும் சமத்துவநிலையாகவே படுகிறது.. இப்பால்மனதிற்கு.. 
செத்துப்போக மனமில்லை.  சாவக்கண்டு பயமில்லை..  மனிதர்களோட கூட்டமாக வாழ விருப்பமில்லை..  அதற்காக மனிதர்கள வெறுக்கல..  இவுலகம் எனக்களிக்கும் இரக்கப்பார்வையும், அருவருப்புப்பார்வையும் ஒரே மாதிரியாகவே தெரிகிறது...  இதனால் எனகெந்த நற்பயனும் இல்லை..  கருணை கொண்ட உண்மையான உள்ளம் இரக்கத்தன்மையை மிஞ்சியே நிற்கும்.... அதுவே உண்மை. 

தெய்வங்களுக்கு நடத்தப்படும் அபிஷோகங்களும், பூசைகளும்

 பாலாபிஷோகம் தொடங்கி பஞ்சாமிர்தபிஷோகம் வரை உனக்கு நடத்தப்படுகிறது.. அது போற்றி வணங்குதல் இல்லை.  நாங்கள் வயிறு வாடிய நிலையில் உள்ளோம் என குறிப்பால் உணர்த்தும் தூற்றி வணங்குதல் நிலையே..  நீ வந்து உதவாவிடினும் உன்னால் உடுத்த முடியாத பட்டாடையும், சுவைக்க முடியாத உணவையும், உன் உடம்பில் பதிக்க முடியாது போன ஆபரங்களையும் எங்கள் துயர் நீக்க தரலாமே..  கல்லிடம் மனம் இருப்பதாக நினைக்கும் இந்த கல் நெஞ்சக்கார்களின் மனத்தில் வாழுகிறாயே.. கல்லாய் போன கடவுளே... நான் கடவுள் மறுப்பாளர் அல்ல. எனக்கென்று ஒரு கடமை இருக்கிற பொழுது, அக்கடவுளுகென்று ஒரு கடமை இருக்கிறது.. அதை  செய்ய தூண்டுகிறேன்..  நான் தவறிழைக்கும் போது என்னை தண்டிக்க எவ்வளவு உரிமையை எடுக்கிறாரோ.. அதே உரிமையை அவர் கடமையைச் செய்ய மறுக்கிறபோது நாமும் கையில் எடுப்பதில் தவறில்லை. .. 

விடுதலை எங்கே

நிரபராதி ஒருவர் தன்னைச் அரசின் சிறைச்சாலையிலிருந்து விடுவித்து கொள்கிறார்.  பின்னர் வெளியுலத்திடம் இருந்து தன்னைக் காக்க வேண்டும் என்பதற்காக, தனக்கான சிறைச்சாலையைத் தானே கட்டிக் கொள்கிறார்..  விடுதலை வாழ்வெங்கே?..  அடைபட்டுக் கிடந்தோம் ஒருநாள். இப்போது அடைபடுவதற்காகவே போராடி பெறுகிறோம் உரிமையை..